தேசிய செய்திகள்

சிவமொக்காவில், 3 இடங்களில் முன்பதிவு ஆட்டோ சேவை திட்டம் தொடக்கம்

சிவமொக்காவில், 3 இடங்களில் முன்பதிவு ஆட்டோ சேவை திட்டத்தை வருவாய் துறை அதிகாரி தொடங்கி வைத்தார்.

தினத்தந்தி

சிவமொக்கா;

சிவமொக்கா நகரில் முன்பதிவு ஆட்டோ சேவையை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக சிவமொக்கா போக்குவரத்து துறை கூடுதல் ஆணையர் காயத்ரி தேவி, சிவமொக்கா மாவட்ட வருவாய் துறை அதிகாரி கங்காதரிடம் தெரிவித்தார்.

அதன்பேரில் சிவமொக்கா டவுனில் ரெயில் நிலையம், அரசு பஸ் நிலையம், சகாயாத்ரி கல்லூரி ஆகிய 3 இடங்களில் முன்பதிவு ஆட்டோ சேவையை தொடங்க அதிகாரி கங்காதர் உத்தரவிட்டார். முன்னதாக இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் அதிகாரி கங்காதர் தலைமையில் சிவமொக்கா டவுனில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடந்தது.

கூட்டத்தில் ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள், தனியார் பஸ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய ஆட்டோ டிரைவர்கள் முன்பதிவு ஆட்டோ சேவை திட்டத்தை தொடங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பொதுமக்கள் இந்த திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, ஆட்டோ டிரைவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

ஆட்டோ டிரைவர்கள் சீருடை அணிவதில்லை, மீட்டர் போடுவது இல்லை, அரசு அறிவித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் கேட்டு தொல்லை கொடுக்கிறார்கள் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினர். இதையடுத்து பொதுமக்களின் நலனே முக்கியம் என்று கூறி முன்பதிவு ஆட்டோ சேவையை ரெயில் நிலையம் உள்பட 3 இடங்களில் அதிகாரி கங்காதர் தொடங்கி வைத்தார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு