தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் சாவு

உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

அலிகார்,

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் அருகே கார்சியா பகுதியில் ஒரு வியாபாரி திருட்டுத்தனமாக நாட்டு சாராயம் காய்ச்சினார்.

அதை வாங்கிக்குடித்த 2 பேர் இறந்து விட்டதாக லோதா போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இருவரும் சரக்கு வாகன டிரைவர்கள் ஆவர்.போலீசார் அங்கு சென்றபோது, கார்சியா மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மேலும் 9 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்திருப்பது தெரிய வந்தது.

மயங்கிய நிலையில் கிடந்த சிலர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்ககூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்