Image courtesy : ANI 
தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் தடம்புரண்டது

15 பெட்டிகள் தடம்புரண்டதால், பெட்டிகள் சரிந்து அதில் இருந்த நிலக்கரி தண்டவாளத்தின் அருகே சிதறியது.

தினத்தந்தி

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பர்தானா மற்றும் ஏக்தில் ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பகுதியில் நேற்று சரக்கு ரெயில் ஒன்று தடம்புரண்டது. இந்த ரெயில் அரியானாவில் உள்ள கலனோர் பகுதிக்கு நிலக்கரியை ஏற்றிச் சென்றுள்ளது.

ரெயிலில் உள்ள 15 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம்புரண்டதால், பெட்டிகள் சரிந்து அதில் இருந்த நிலக்கரி தண்டவாளத்தின் அருகே சிதறியது. உடனடியாக ஆக்ரா மற்றும் கான்பூரில் இருந்து மீட்பு ரெயில்கள் விரைந்து வந்தன. இதனால் அந்த பாதையில் ரெயில் சேவை சில மணி நேரம் பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை, மேலும் யாரும் காயமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து