தேசிய செய்திகள்

விராஜ்பேட்டையில் கஞ்சா பயன்படுத்திய 4 பேர் கைது

விராஜ்பேட்டையில் கஞ்சா பயன்படுத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

குடகு :-

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா நாபொக்லு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் இளைஞர்கள் பலர் கஞ்சா பயன்படுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் 4 பேர் கஞ்சா போதையில் சுற்றி திரிந்தனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் நாபொக்லு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் விராஜ்பேட்டையை சேர்ந்த அஸ்ரப், குருளி கிராமத்தை சேர்ந்த ஹசினார், பசீர், ஹக்கீம் என்று தெரியவந்தது.

இவர்கள் போதைப்பொருள் விற்பனை கும்பலிடம் இருந்து கஞ்சாவ வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு சய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை