தேசிய செய்திகள்

ராமர் கோவில் திறப்பு விழா; பா.ஜ.க. நடத்தும் நிகழ்வு போல் காட்டப்படுகிறது - அசோக் கெலாட்

கடவுள் ராமர் அனைவருக்கும் உரியவர் என ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு செய்து வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விழாவில் கலந்து கொள்வது குறித்து விரைவில் முடிவு செய்வோம் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ராமர் கோவில் திறப்பு விழா பா.ஜ.க. நடத்தும் நிகழ்வு போல் காட்டப்படுகிறது என ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடவுள் ராமர் அனைவருக்கும் உரியவர். அனைவருமே ராம பக்தர்கள்தான். தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்தில், ராமர் கோவில் திறப்பு விழா பா.ஜ.க. நடத்தும் நிகழ்வு போல் காட்டப்படுகிறது" என்று தெரிவித்தார். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்