தேசிய செய்திகள்

ஆதிச்சநல்லூர் உள்பட 5 தொல்பொருள் தளங்கள் மேம்படுத்தப்படும்- அருங்காட்சியகங்கள் உருவாக்கப்படும் -நிர்மலா சீதாராமன்

ஆதிச்சநல்லூர் உள்பட நாடு முழுக்க 5 தொல்பொருள் தளங்கள் மேம்படுத்தப்படும் அருங்காட்சியகங்கள் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி

2020-21ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் வாசித்து வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* ஆதிச்சநல்லூர் உள்பட நாடு முழுக்க 5 தொல்பொருள் தளங்கள் மேம்படுத்தப்படும். இந்த 5 இடங்களிலும் சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகங்கள் உருவாக்கப்படும்

* மனிதக் கழிவை மனிதனே அகற்றக்கூடாது. மனித கழிவை மனிதனே அகற்றுவதை தடுக்க திட்டம் வகுக்கப்பட்டு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும்

* பழங்குடியினர் நலனுக்கு இந்த பட்ஜெட்டில் 53 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

* பேட்டி பச்சாவ் பேட்டி படாவ் திட்டம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது, பள்ளிகளில் சேரும் பெண் குழந்தைகள் எண்ணிக்கை, ஆண் குழந்தைகள் எண்ணிக்கையைவிட அதிகம்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்