கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

இதுவரை 3 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்

கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்ய இம்மாதம் 31-ந் தேதி கடைசிநாள் ஆகும்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்ய இம்மாதம் 31-ந் தேதி கடைசிநாள் ஆகும். இந்த நிலையில், கடந்த 18-ந் தேதி வரை 3 கோடியே 6 லட்சம் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 2 கோடியே 81 லட்சம் கணக்குகள், அதாவது 91 சதவீத கணக்குகள் ஆன்லைனில் சரிபார்க்கப்பட்டுள்ளன. சரிபார்க்கப்பட்ட கணக்குகளில் 1 கோடியே 50 லட்சத்துக்கு மேற்பட்ட கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. இத்தகவலை வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

3 கோடி கணக்குகள் தாக்கல் என்ற சாதனை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 7 நாட்கள் முன்பே எட்டப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்