கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

வருமான வரி கணக்கு செலுத்த செப்டம்பர் 30-ந்தேதிவரை கால நீட்டிப்பு

வருமான வரி கணக்கு செலுத்த செப்டம்பர் 30-ந்தேதிவரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

2020-2021 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தனிநபர்களுக்கு ஜூலை 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். கம்பெனிகளுக்கு அக்டோபர் 31-ந்தேதி கடைசி நாள். இந்தநிலையில், கொரோனா தாக்கம் காரணமாக வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இந்த கால அவகாசத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது.

அதன்படி, தனிநபர்கள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்தற்கான கடைசி தேதி செப்டம்பர் 30-ந்தேதி வரையும், கம்பெனிகள் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 30-ந்தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுபோல், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு படிவம்-16 அளிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிதி நிறுவனங்கள் நிதி பரிவர்த்தனை அறிக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூன் 30-ந்தேதி வரையும், வரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் அக்டோபர் 31-ந்தேதி வரையும், திருத்தப்பட்ட வருமான கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந்தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு