தேசிய செய்திகள்

கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரி வீட்டில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.5 கோடி சிக்கியது

கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.5 கோடி சிக்கியது.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான பரமேஸ்வர், முன்னாள் மத்திய மந்திரி ஆர்.எல்.ஜாலப்பா ஆகியோரின் வீடு, அலுவலகங்கள் என மொத்தம் 30 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் 100 பேர் ஒரே நேரத்தில் சோதனை நடத்த தொடங்கினர்.

இந்த சோதனை 2-வது நாளாக தொடர்ந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மதியம் 3 மணியளவில் முடிவடைந்தது. 32 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது.

பரமேஸ்வரின் வீடு மற்றும் கல்லூரிகளில் இருந்து ரூ.5 கோடியை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடர்பான ஆவணங்களையும் அவர்கள் கைப்பற்றினர். பரமேஸ்வரின் வீட்டில் இருந்து ஒரு டைரியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளது குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கணக்கில் வராத பணம் மற்றும் சிக்கியுள்ள ஆவணங்களின் அடிப்படையில் மேலும் தீவிர விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு