தேசிய செய்திகள்

திருப்பதியில் உண்டியல் வருவாய் அதிகரிப்பு: இந்த ஆண்டு ரூ.1500 கோடியை எட்டும் எனத்தகவல்

திருப்பதியில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், உண்டியல் வருவாயும் வெகுவாக அதிகரித்துள்ளது.

தினத்தந்தி

திருப்பதி,

திருப்பதியில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதன் மூலம் உண்டியல் வருவாய் வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த 5 மாதங்களில் மாதம்தோறும் உண்டியல் காணிக்கை ரூ.100 கோடிக்கும் மேல் வசூலாகியுள்ளது என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் ரூ.128 கோடி, ஏப்ரல் மாதத்தில் ரூ.127.5 கோடி, மே மாதத்தில் ரூ.129.93 கோடி, ஜூன் மாதத்தில் ரூ.120 கோடி, ஜூலை மாதம் இதுவரை ரூ.106 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது. இதே நிலை தொடரும் பட்சத்தில் இந்த ஆண்டு முடிவுக்குள் உண்டியல் வருவாய் ரூ.1500 கோடியை எட்டும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது போக தங்கம், வெள்ளி, வைரம் தனியாக கணக்கில் சேர்க்கப்படும். திருப்பதியில் நேற்று 80,815 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 31,562 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.82 கோடி உண்டியல் வசூலானது. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்