தேசிய செய்திகள்

இந்தியா போரை விரும்பாத நாடு... ஆனால் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் - பாதுகாப்புத்துறை மந்திரி

இந்தியா போரை விரும்புவதில்லை... ஆனால், போருக்கு தூண்டப்பட்டால் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயார் என்று பாதுகாப்புத்துறை மந்திரி கூறினார்.

இட்டாநகர்,

லடாக், அருணாச்சலபிரதேசம், சீக்கிம் உள்பட எல்லை மாநிலங்களில் சாலை, பாலம் உள்பட 28 எல்லை உள்கட்டமைப்பு திட்டங்களை அருணாச்சலபிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்பணித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத்சிங், இந்தியா போரை விரும்பாத நாடு. மேலும், அண்டை நாடுகளுடன் அன்பான உறவை மேம்படுத்தவே விரும்புகிறது. இந்த தத்துவம் கடவுள் ராமர் முதல் கடவுள் புத்தரின் போதனைகள் வரை நமது மரபில் பெறப்பட்ட தத்துவம்.

போருக்கு தூண்டப்பட்டால் எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. எல்லையில் எத்தகையை சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் இந்திய ராணுவத்திற்கு உள்ளது' என்றார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு