தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசியில் இந்தியா சாதனை; முதல் நாளில் அதிகம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது

இந்தியாவில் முதல் நாளில் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த 3-ந் தேதி ஒப்புதல் அளித்தது.

தொடர்ந்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 16-ந் தேதி தொடங்கி வைத்தார்.

முதல் கட்டமாக 3 கோடி சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கான செலவை மத்திய அரசு ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளை விட அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு முதல் நாளில் இந்தியாவில் தடுப்பூசி போட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதை சுட்டிக்காட்டி மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் டுவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

மேலும் ஒரு சாதனை. பல நாடுகளை விட இந்தியாவில் முதல் நாளில் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுவரையில் 2 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாவது நாளில் (நேற்று முன்தினம்) 6 மாநிலங்களில் 17 ஆயிரத்து 72 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு