புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களாக தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது. நேற்று சுமார் 25 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று தொற்று பாதிப்பு சற்று உயர்ந்து இருக்கிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37, 593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 648 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து 34,169- பேர் குணம் அடைந்துள்ளனர்.
நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 25 லட்சத்து 12 ஆயிரத்து 366 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 17 லட்சத்து 54 ஆயிரத்து 281- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 22 ஆயிரத்து 327- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்து 758 ஆக உயர்ந்துள்ளது.