தேசிய செய்திகள்

இந்திய பெருங்கடலில் நடந்த 3 நாடுகளின் கடலோர காவல்படை கூட்டு பயிற்சி

இந்தியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய 3 நாடுகளின் கடலோர காவல்படை கூட்டு பயிற்சி இந்திய பெருங்கடலில் நடந்தது.

தினத்தந்தி

கொழும்பு,

இந்தியா, மாலத்தீவு மற்றும் இலங்கை ஆகிய 3 நாடுகளின் கடலோர காவல்படை சார்பில் தோஸ்தி என்ற பெயரில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டு பயிற்சி நடந்து வருகிறது. இந்தியா-மாலத்தீவு நாடுகள் மட்டும் பங்கேற்று வந்த இந்த பயிற்சியில், 2012-ம் ஆண்டு முதல் இலங்கையும் இணைந்து கொண்டது.

இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பை வலுப்படுத்துதல், பரஸ்பர செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காக நடத்தப்படும் இந்த முத்தரப்பு பயிற்சி இந்த ஆண்டு 30-வது ஆண்டை எட்டியுள்ளது. இந்த 3 நாட்டு கடலோர காவல் படையினருக்கான 15-வது பயிற்சி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்திய பெருங்கடல் பகுதியில் நடந்த இந்த பயிற்சி நேற்று மாலத்தீவில் நிறைவடைந்தது.

இந்த நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துதல், 3 நாடுகளின் கடலோர காவல்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை உருவாக்குதல் போன்றவையே இந்த பயிற்சியின் நோக்கம் என மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை