தேசிய செய்திகள்

அடுத்த மாதம் முதல் தடுப்பூசி ஏற்றுமதி தொடங்கும்: மத்திய சுகாதாரத்துறை மந்திரி

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 81 கோடியை தாண்டிவிட்டதாக மத்திய மந்திரி தெரிவித்தார்.

புதுடெல்லி,

இந்தியா தன்னிடம் உள்ள உபரி தடுப்பூசிகளை அடுத்த மாதம் முதல் ஏற்றுமதி செய்ய தொடங்கும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மனுசுக் மாண்ட்வியா கூறியதாவது; - அக்டோபர் மாதத்தில் 30 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் அரசுக்கு கிடைக்கும். அடுத்த மூன்று மாதங்களில் 100 கோடிக்கும் மேற்பட்ட டோஸ் தடுப்பூசிகள் கிடைக்கும். நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 81 கோடியை தாண்டிவிட்டது.

கடந்த 11 நாட்களில் மட்டும் 10 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. நமது நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படும். எனினும், உபரியாக உள்ள தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யும் பணி அடுத்த காலாண்டில் (அக்-நவம்பர்) தொடங்கும். தடுப்பூசி மைத்ரி மற்றும் கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் அளித்த உறுதிப்பட்டை நிறைவேற்றும் வகையில் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் என்றார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு