தேசிய செய்திகள்

இந்திய-அமெரிக்க விமானப்படை 12 நாட்கள் கூட்டு பயிற்சி: மேற்கு வங்காளத்தில் இன்று தொடங்குகிறது

இந்திய-அமெரிக்க விமானப்படைகளுக்கு இடையேயான 12 நாட்கள் கூட்டு பயிற்சி மேற்கு வங்காளத்தில் இன்று தொடங்குகிறது

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய-அமெரிக்க விமானப்படைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் 12 நாட்கள் கூட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றன. மேற்கு வங்காளத்தில் உள்ள கலைகுண்டா, பானாகார் ஆகிய 2 விமானப்படை தளங்களில் இந்த பயிற்சி நடைபெறுகிறது. 2 தளங்களில் பயிற்சியில் ஈடுபடுவது இதுவே முதல் முறை. இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களை வலுப்படுத்தும் வகையில் அமெரிக்க, இந்திய விமானப்படைகள் அனைத்து ஒத்துழைப்பையும் உறுதி செய்யும்.

செயல்திறன் வெளிப்பாட்டை வழங்குவது, சிறந்த பயிற்சிகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள்வது ஆகியவையே இந்த கூட்டு பயிற்சியின் நோக்கம் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. அமெரிக்க கடற்படையின் எப் 15 மற்றும் சி-130 ராணுவ விமானம் ஆகியவற்றையும், இந்திய விமானப்படை ஜாகுவார், மிராஜ் 2000, சூ-30 எம்கேஐ போன்ற விமானங்களையும் பயிற்சிக்கு பயன்படுத்துகிறது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?