தேசிய செய்திகள்

இந்தியா பல வழிகளில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும்: மத்திய சுகாதார துறை மந்திரி தகவல்

அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள்ளாக, இந்தியா பல வழிகளில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் என்று மத்திய சுகாதார துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தயாரிக்க உலகில் பல்வேறு நாடுகள் போட்டிபோட்டு வருகின்றன. சில தடுப்பு மருந்துகள் உச்ச கட்ட பரிசோதனையை எட்டி உள்ளது. இருந்தாலும் இன்னும் வெற்றிகரமான ஒரு தடுப்பூசி உருவாகவில்லை.

இந்த நிலையில் மத்திய சுகாதார துறை மந்திரி ஹர்ஷ வர்தன், இந்தியா அடுத்த ஆண்டின் தொடக்கத்திற்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் கொரோனா தடுப்பு மருந்துகளை உருவாக்கிவிடும். நாங்கள் திட்டமிட்ட தடுப்பூசி வினியோகத்திற்காக தயாராகி வருகிறோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

உயர்நிலை மந்திரிகள் குழுவின் காணொலி கருத்தரங்கில் கலந்து கொண்டபோது அவர் இந்த தகவலை பகிர்ந்தார்.

2021-ம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் கொரோனா தடுப்புமருந்து கிடைக்கும். 40 முதல் 50 கோடி டோஸ் அளவில் அந்த மருந்தை பெறவும், 20 முதல் 25 கோடி மக்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் தடுப்பூசி போடவும் தயாராகி வருகிறோம் என்றும் கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்