Image Courtesy : PTI 
தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் இந்திய விமானப் படையின் பயிற்சி விமானம் விபத்து

விமானத்தில் இருந்த 2 வீரர்களும் பாதுகாப்பாக வெளியேறியதாக விமானப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தா,

இந்திய விமானப் படைக்கு சொந்தமான 'ஹாக்' பயிற்சி விமானம், மேற்கு வங்க மாநிலம் பாஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள கலைகுண்டா பகுதியில் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தின்போது விமானத்தில் இருந்த 2 வீரர்களும் பாதுகாப்பாக வெளியேறியதாக விமானப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயிற்சி வீமானத்தில் வீரர்கள் பயிற்சி முடித்து திரும்பியபோது எதிர்பாராத விதமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிர்சேதமோ, பொதுமக்களின் சொத்துக்களுக்கு பாதிப்போ ஏற்படவில்லை என விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு