தேசிய செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஆசிய விளையாட்டுப்போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்-வீராங்கனைகள் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். #NarendraModi

புதுடெல்லி,

இந்தோனேசியாவில் நடைபெற்ற 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 15 தங்கம் உட்பட 69 பதக்கங்களை குவித்தது. பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகள் நேற்று முன் தினம் நாடு திரும்பினார்கள். அவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தநிலையில், ஆசிய விளையாட்டுப்போட்டியில் பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகள் புதுடெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அப்போது அவர்களை வாழ்த்தி ஊக்கப்படுத்தினார்.

பின்னர் வீராங்கனைகள் டூட்டிசந்த், ஸ்வப்னா பர்மன், ஹிமா தாஸ் உள்ளிட்டோரை தனித்தனியாக அழைத்து பாராட்டினார். பின்னர் வீரர்-வீராங்கனைகள் பிரதமர் மோடியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்