தேசிய செய்திகள்

அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்தியருக்கு 7 ஆண்டு சிறை

மனிஸ் குமார் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளி மனிஸ் குமார் (வயது 34). இவர் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து போதைப்பொருள்களை கடத்தி அமெரிக்கா முழுவதும் வினியோகம் செய்து வந்தார்.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் மனிஸ் குமார் இந்த கடத்தலில் ஈடுபட்டு வந்தார். அவர் இந்த போதைப்பொருள் கடத்தல் மூலம் 3.5 மில்லியன் டாலர் (சுமார் ரூ.28 கோடி) வரை வருவாய் ஈட்டினார்.

இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்டு மனிஸ் குமாரின் போதைப்பொருள் கடத்தல் அம்பலமானது. இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு அமெரிக்காவின் பாஸ்டன் நகர கோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனிஸ் குமார் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் பாஸ்டன் நகர கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. அதன்படி மனிஸ் குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவருக்கு 1 லட்சம் டாலர் (சுமார் ரூ.81 லட்சம்) அபராதமும் விதிக்கப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்