தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 22 ஆண்டுகளில் ரெயில் விபத்துகள் 90 சதவீதம் குறைந்துள்ளது - மத்திய மந்திரி அர்ஜூன் முந்தா தகவல்

கடந்த 22 ஆண்டுகளில் ரெயில் விபத்துகள் 90 சதவீதம் வரை குறைந்துள்ளதாக மத்திய மந்திரி அர்ஜூன் முந்தா தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜூன் முந்தா டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ரெயில்வே பாதுகாப்பில் 9 ஆண்டுகால மோடி அரசின் சாதனைகளை எடுத்துரைத்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-

"கடந்த 22 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள போக்குகளை ஆராய்ந்தால், 2000-01 நிதியாண்டில் 473 ஆக இருந்த ரெயில் விபத்துகள் 2022-23 நிதியாண்டில் 48 ஆக குறைந்துள்ளது. அதாவது கடந்த 22 ஆண்டுகளில் ரெயில் விபத்துகள் 90 சதவீதம் வரை குறைந்துள்ளது. ரெயில் நடவடிக்கைகளின் பாதுகாப்பை பலப்படுத்த ரயில்வே பல முக்கியமான நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது.

முக்கியமான ரெயில் பாதுகாப்பு சொத்துக்களை மாற்றுதல், புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக கடந்த 2017-18-ம் நிதியாண்டில் 'ராஷ்ட்ரிய ரெயில் சன்ரக்ஷா கோஷ்' என்ற திட்டத்தின் கீழ் பெரும் நிதி ஒதுக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கான இந்த ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி கணிசமான முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது."

இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்