தேசிய செய்திகள்

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு: 2.12 லட்சம் ஆம்போடெரிசின் பி மருந்து குப்பிகள் ஒதுக்கீடு

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு சிகிச்சைக்கு பயன்படும் 2.12 லட்சம் ஆம்போடெரிசின் பி மருந்து குப்பிகள் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா 2வது அலையில் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு, தொடர்ச்சியாக கருப்பு பூஞ்சை நோய் தொற்றும் ஏற்பட்டு வருகிறது. இதனால், மக்கள் அதற்கும் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

கொரோனா சிகிச்சைக்கு ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட கூடிய சாத்தியம் அதிகமுள்ளது என கூறப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு காணப்படுகிறது.

இதனை முன்னிட்டு ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழகம், ஒடிசா, குஜராத், பஞ்சாப், அரியானா, கர்நாடகா, பீகார் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இதனை தொற்று நோய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட தொற்று நோயாக அறிவித்து உள்ளது.

இந்நிலையில், மத்திய ரசாயனம் மற்றும் உர துறை மந்திரி சதானந்தா கவுடா இன்று கூறும்போது, கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு சிகிச்சைக்கு பயன்பட கூடிய 2.12 லட்சம் ஆம்போடெரிசின் பி மருந்து குப்பிகள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைப்புகளுக்கு வழங்குவதற்காக கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு தேவையான மருந்து போதிய அளவில் கிடைப்பதற்காக இதுவரை இந்தியா முழுவதும் 10 லட்சம் குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்