தேசிய செய்திகள்

கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு நெருக்கடியான சூழலில் வருபவர்களை அனுமதிக்க கேரள ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு

கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு நெருக்கடியான சூழலில் வருபவர்களை அனுமதிக்கும்படி கேரள ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவிட்டு உள்ளது.

தினத்தந்தி

கொச்சி,

கேரளாவில் கொரோனா 2வது அலையின் தீவிரம் குறையாமல் அதிகரித்து வரும் சூழலில், கடந்த 24 மணிநேரத்தில் 21,613 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என கேரள சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

கேரளாவில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கேரள மக்கள் கர்நாடகாவுக்குள் நுழைவதற்கு தடை விதித்து உள்ளது. இந்த நிலையில், கேரள ஐகோர்ட்டு பிறப்பித்து உள்ள உத்தரவில், கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட நெருக்கடியான சூழலில் வருபவர்களை அனுமதிக்கும்படி இடைக்கால உத்தரவிட்டு உள்ளது.

அவர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்கும்போது, எந்த வாகனம் என்று கவனத்தில் கொள்ளாமல் அவர்கள் கர்நாடகாவுக்குள் நுழைவதற்கு அனுமதி அளிக்கும்படியும் உத்தரவில் தெரிவித்து உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து