கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மணிப்பூரில் இணையதள சேவைகளுக்கு ஜூலை 10 வரை தடை நீட்டிப்பு

மணிப்பூரில் இணையதள சேவைகளுக்கு ஜூலை 10 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

இம்பால்,

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ம் தேதி இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். தொடர்ந்து அடிக்கடி வன்முறை பரவி வரும் சூழலில் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுக்க மே 3-ம் தேதி இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. கலவரம் எதிரொலியாக இணையதள சேவைக்கான தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அமைதி மற்றும் பொது ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் மணிப்பூரில் மேலும் 5 நாட்களுக்கு இணையதள சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூலை 10-ம் தேதி மாலை 3 மணி வரை இணையதள சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து