தேசிய செய்திகள்

அசாமில் இன்று இணைய சேவை துண்டிப்பு

காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இணைய சேவை துண்டிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

கவுகாத்தி,

அசாமில் மாநில அரசு பணிகளுக்கான எழுத்து தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்வு நடைபெறும் நேரமான காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இணைய சேவை துண்டிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உள்துறை தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும் வகையிலும் மாநிலம் முழுவதும் செல்போன் தொடர்புடைய அனைத்து இணைய சேவைகளும் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நிறுத்தப்படும். அதே வேளையில் நிலையான தொலைபேசி இணைப்புகளின் அடிப்படையிலான குரல் அழைப்புகள் மற்றும் பிராட்பேண்ட் இணைப்பு ஆகியவை வழக்கம்போல் செயல்பாட்டில் இருக்கும்" என கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்