தேசிய செய்திகள்

காற்று மாசுபாடு பிரச்சினையை ஒரேநாளில் தீர்க்க முடியாது-பிரகாஷ் ஜவடேகர் சொல்கிறார்

மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று பேஸ்புக் நேரலை மூலம் மக்களிடம் உரையாடினார். அப்போது சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து பல்வேறு கருத்துகளை வெளியிட்டார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று பேஸ்புக் நேரலை மூலம் மக்களிடம் உரையாடினார். அப்போது சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து பல்வேறு கருத்துகளை வெளியிட்டார்.

அவர் கூறுகையில், வாகன நெரிசல், தொழிற்சாலைகள், கழிவுகள், தூசுகள், குப்பைகள் உள்ளிட்டவையே காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணிகள் ஆகும். வட இந்தியாவில் காற்று மாசுபாட்டுக்கு தூசுகள் முக்கிய பங்காற்றுகின்றன. வண்டல் மண் அதிகமான தூசுகளை உருவாக்குகிறது என்று தெரிவித்தார்.

மாசுபாடு பிரச்சினையை ஒரே நாளில் தீர்க்க முடியாது என்று கூறிய ஜவடேகர், மாசு காரணிகளை தடுப்பதற்கு தொடர் முயற்சிகள் அவசியம் என்றும் தெரிவித்தார். வாகன மாசுகளை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பி.எஸ்.6 ரக வாகனங்களை அறிமுகப்படுத்தி இருப்பதாக கூறிய அவர், எலக்ட்ரானிக் வாகனங்களுக்கு மக்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

டெல்லியில் காற்று மாசுபாட்டை தடுக்க வேண்டிய பொறுப்பு நகராட்சிகளிடம் மட்டுமின்றி மாநில அரசுக்கும் இருப்பதாகவும், அங்கு மாசுபாட்டை குறைக்க குறைந்த, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்களை அரசு தயாரித்து இருப்பதாகவும் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து