மும்பை,
விற்பனை தொடங்கியதையடுத்து, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் புதிய ஐபோனை வாங்க வாடிக்கையாளர்கள் அதிகாலையிலேயே குவிந்தனர். இதனால் சில ஆப்பிள் ஸ்டோர்களுக்கு முன்பு நீண்ட வரிசை காணப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை இந்தியாவில் இன்று தொடங்கியது. கடந்த செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற்ற ‘சர்ப்ரைஸ் அண்ட் ஷைன்’ நிகழ்ச்சியில் இந்த புதிய மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. செப்டம்பர் 12-ம் தேதி முன்பதிவு தொடங்கிய நிலையில், இன்று முதல் இந்தியாவில் விற்பனை தொடங்கியுள்ளது.
இந்தியாவில் ஐபோன் 18 ப்ரோவின் ஆரம்ப விலை ரூ.1,64,900 ஆகவும், ஐபோன் 18 ப்ரோ மேக்ஸின் ஆரம்ப விலை ரூ.1,79,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல்கள் 256 ஜிபி முதல் 2 டிபி வரையிலான சேமிப்பு திறன் கொண்ட வகைகளில் கிடைக்கின்றன.
ஐபோன் 18 ப்ரோ சீரிஸில் புதிய A20 Pro சிப், 48 மெகாபிக்சல் Fusion பிரதான கேமரா மற்றும் variable aperture வசதி உள்ளிட்ட பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், புதிய வெப்ப மேலாண்மை அமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட பேட்டரி செயல்திறனையும் ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது.
விற்பனை தொடங்கியதையடுத்து, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் புதிய ஐபோனை வாங்க வாடிக்கையாளர்கள் அதிகாலையிலேயே குவிந்தனர். இதனால் சில ஆப்பிள் ஸ்டோர்களுக்கு முன்பு நீண்ட வரிசை காணப்பட்டது. முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு இன்று முதல் போன்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன.
ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு விற்பனை தளங்களில் கிடைக்கின்றன.