புதுடெல்லி,
2026-27 ஆம் கல்வியாண்டில் இருந்து பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முன்னெடுப்புக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தோல்விகளை மறக்க இந்தி திணிப்பு என்பதா? என மு.க.ஸ்டாலின் பதிவுக்கு தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
அரசியல் தோல்விகளை மறைக்க இந்தி திணிப்பு என்ற வார்த்தை பயன்படுத்துவது சலிப்பூட்டுகிறது.
தோல்விகளை மறைக்க இந்தி திணிப்பு என்பதா? கூடுதல் மொழிகளை கற்றுக்கொள்வதால் தமிழ் பலவீனமடைவதில்லை; மாறாக, அதைப் பேசுபவர்கள் தன்னம்பிக்கை பெறுவர்.
புதிய கல்விக் கொள்கை அரசியலமைப்பு சட்டத்தை மதித்து அனைத்து மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து இந்திய மொழிகளையும் வலுப்படுத்தும் தேசிய முயற்சியில் இணைவது அவசியம் என அதில் பதிவிட்டுள்ளார்.