தேசிய செய்திகள்

குரங்கு அம்மை சிகிச்சைக்காக 3 மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் - டெல்லி அரசு நடவடிக்கை

குரங்கு அம்மை நோய் பாதிப்பிற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க டெல்லி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி குரங்கு அம்மை பாதிப்பு முதன் முதலாக உறுதி செய்யப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் வயநாடு வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அந்த நபர் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் குணமடைந்தார். இவரை தவிர கேரளாவில் மேலும் 4 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் இதுவரை குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் தலைநகர் டெல்லியில் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று டெல்லியில் வசிக்கும் நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் குரங்கு அம்மை நோய் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்க டெல்லி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி குரங்கு அம்மை சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள 3 தனியார் மருத்துவமனைகளில் தலா 10 அமைக்க டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் குரங்கு அம்மை அறிகுறி உள்ளவர்களுக்காக 5 அறைகளையும், குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவர்களுக்காக 5 அறைகளையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்