Image Courtesy: PTI 
தேசிய செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் பென்னட்டுடன் மோடி பேச்சு..!!

இஸ்ரேல் பிரதமர் பென்னட்டுடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமர் மோடி நேற்று இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து இருவரும் விவாதித்தனர். மேலும் உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட புவி அரசியல் சார்ந்த விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இந்த உரையாடலின்போது, இஸ்ரேல் பிரதமர் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் மீண்டு வர பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் இஸ்ரேலில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாகுதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும் தெரிவித்தார்.

இஸ்ரேல் பிரதமரை இந்தியாவில் விரைவில் வரவேற்பதற்கு ஆர்வமுடன் இருப்பதாகவும் மோடி தனது உரையாடலின்போது கூறியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்