தேசிய செய்திகள்

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வீடுகளில் சோதனை

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தினர்.

தினத்தந்தி

ஐதராபாத்,

முதல்-மந்திரி சந்திரசேகரராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி ஆட்சி நடக்கிற தெலுங்கானா மாநிலத்தில், ஆளும் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள், ஒரு எம்.பி. மீது வரி ஏய்ப்பு, சட்ட விரோத ரொக்க பரிமாற்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.பி. பிரபாகர் ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் ஜனார்த்தன ரெட்டி, சேகர் ரெட்டி ஆகியோரின் வீடுகளில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வருமான வரி அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனைகள் நடத்தினர்.

இந்த சோதனைகள் பெங்களூரு, ஐதராபாத் மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் பல இடங்களில் ஒரே நேரத்தில் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது