தேசிய செய்திகள்

எங்களுடைய பள்ளிகளை ஸ்டாலினுக்கு காட்சிப்படுத்தியது எங்களுக்கு கவுரவம்; கெஜ்ரிவால் பேட்டி

எங்களுடைய பள்ளிகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு காட்சிப்படுத்தியது எங்களுக்கு கிடைத்த கவுரவம் என கெஜ்ரிவால் பேட்டியில் கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை நேற்று நேரில் சந்தித்து பேசினார்.

இதனை தொடர்ந்து, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலையும் அவர் இன்று சந்தித்து பேசியுள்ளார். இதன்பின், கெஜ்ரிவாலுடன் டெல்லியில் உள்ள பள்ளி கூடங்களுக்கு நேரில் சென்று அவற்றை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், டெல்லி மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இதேபோன்று சமூக சுகாதார சேவை மையங்களாக செயல்பட்டு வரும் டெல்லியில் உள்ள மொஹல்லா கிளினிக்குகளையும் அவர் பார்வையிட்டார்.

பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பிரிவினர் பயன்பெறும் நோக்கில் இவை அமைந்துள்ளன. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், கல்வி மற்றும் சுகாதார சேவைகளில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்திலும் நவீன பள்ளிக்கூடங்களை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

அதற்கான தொடக்க நிகழ்ச்சியில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கலந்து கொள்வார் என நான் உறுதியாக கூறுகிறேன். தமிழக மக்களின் சார்பில் நான் அவரை அழைத்துள்ளேன் என கூறியுள்ளார்.

இதன்பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லியில் உள்ள எங்களுடைய பள்ளிகளுக்கும், மொஹல்லா கிளினிக்குகளுக்கும் வருகை தந்து அவற்றை பார்வையிட்டு உள்ளார். எங்களுடைய பள்ளிகளை அவர்களுக்கு காட்சிப்படுத்தியது எங்களுக்கு கிடைத்த கவுரவம் என்று கூறியுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்