தேசிய செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா தொற்று: இந்தியாவுக்கு மருத்துவ நிபுணர் குழுவை அனுப்பியது இத்தாலி

கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் இந்தியாவுக்கு மருத்துவ நிபுணர் குழுவை இத்தாலி அனுப்பியது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியா கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க இந்தியாவுக்கு உலக நாடுகள் பலவும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

அந்த வரிசையில் இத்தாலி ஆக்சிஜன் உற்பத்தி அலகு மற்றும் 20 வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுடன், மருத்துவ நிபுணர்கள் குழுவையும் இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இத்தாலி விமானப்படைக்கு சொந்தமான ஏ.சி.130 ரக விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழு நேற்று டெல்லி வந்தடைந்தது.

ஒட்டுமொத்த ஆஸ்பத்திரிக்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்ட இத்தாலியின் ஆக்சிஜன் உற்பத்தி அலகு நொய்டாவில் உள்ள ஐடிபிபி ஆஸ்பத்திரியில் நிறுவப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு