கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

லாலு பிரசாத் யாதவுக்கு டெல்லி ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை - குடும்பத்தினர் தகவல்

சிறையில் இருந்து விடுதலையானாலும் லாலு பிரசாத் யாதவுக்கு டெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைகள் தொடரும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

பாட்னா,

பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவுக்கு, கடைசி மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் ஜார்கண்ட் ஐகோர்ட்டு நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கியது. இதனால் அவர் சிறையில் இருந்து இன்று (ஏப்.19) விடுதலை ஆவார் என்று கூறப்படுகிறது.

லாலு பிரசாத்தை எதிர்பார்த்து பாட்னாவில் அவரது ஆதரவாளர்கள் விரிவான வரவேற்பு ஏற்பாடுகளை செய்தனர்.

ஆனால் லாலு பிரசாத் சிறையில் இருந்து விடுதலை ஆனாலும், டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது தொடரும், முழுமையாக குணமடைந்த பிறகே அவர் வீடு திரும்புவார் என்று அவரது குடும்பத்தினர் தெளிவுபடுத்தியுள்ளனர். இதய நோய், சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்காக லாலு பிரசாத் எய்ம்சில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்