Representational image 
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் 22 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தீவிரவாதிகளுக்கு பயிற்சி

பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் 22 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது என மத்திய உளவுத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி

பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தீவிரவாத நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கி உள்ளது. அங்கு தீவிரவாதிகளுக்கு அந்நாட்டின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு முகாம் அமைத்து பயிற்சி அளித்து வருகிறது. இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராகவும் செயல்படும் தீவிரவாத முகாம் குறித்து, வீடியோ ஆதாரங்களுடன் மத்திய உளவுத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.

2019ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்தியா "துல்லிய தாக்குதல்" நடத்தி, தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்களை அழித்தொழித்தது.

இப்போது அதே இடத்தில் மீண்டும் துவக்கப்பட்டுள்ள தீவிரவாத பயிற்சி முகாம், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் மவுலானா அப்துல் ரவுப் அசார் தலைமையில் இயங்கி வருவது தெரிய வந்துள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்