கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவு மந்திரி தொலைபேசியில் பேச்சு

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவு மந்திரி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இருவரும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு மற்றும் உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.

இது குறித்து வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கனுடனான உரையாடல் சிறப்பாக அமைந்தது. பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்புக்கூறல் குறித்த அவரது வலுவான மற்றும் தெளிவான செய்திக்கு நன்றி தெரிவித்தேன். உக்ரைன் மோதல் மற்றும் பிற பிராந்திய பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டது" என குறிப்பிட்டுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு