தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாட்டம்- மசூதிகளில் சிறப்பு தொழுகை

நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி:

இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் பண்டிகை. ஒவ்வொரு ஆண்டும் துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மசூதிகள் மற்றும் மைதானங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு தெழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சிறப்பு தொழுகைகளில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

டெல்லி ஜும்மா மசூதி, போபால் ஈத்கா மசூதி, மும்பை ஹமிதியா மசூதி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பல லட்சம் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

டெல்லி கேட்டில் உள்ள பஞ்சா ஷரிப் தர்காவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி கலந்துகொண்டு, நமாஸ் செய்தார். ஜம்முவிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. மசூதிகளில் சிறப்புத்தொழுகை நடைபெற்றது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து