ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில், இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று இன்று காலை மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. மும்பையிலிருந்து (நவி மும்பை) ஸ்ரீநகர் வந்தடைந்த விமானம், பாதுகாப்பாகத் தரையிறங்கிய பிறகு விமான நிலையத்தின் பார்க்கிங் பகுதிக்குச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
மின்கம்பத்தின் மீது மோதிய வேகத்தில், விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்து நொறுங்கியது. இந்த விபத்து குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) மற்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.