கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

3-வது கட்ட கொரோனா தடுப்பூசி சோதனைக்கு இந்தியாவிடம் அனுமதி கேட்கும் ஜான்சன் அண்டு ஜான்சன்

ஒரே டோஸாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியின் 3-வது கட்ட சோதனைக்கு, இந்தியாவிடம் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2-வது அலை உலகம் முழுவதையும் உலுக்கி வருகிறது. கடந்த 2019- ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பல அலைகளாக அடுத்து அடுத்து வேகமாக பரவி உலக நாடுகளை திணறடித்து வருகிறது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இதனால், தடுப்பூசிகள் போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே கேவாக்சின், கேவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசி பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனிடையே அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் ஒரே டோஸாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியை தயாரித்து பயன்பாட்டுக்கு விட்டுள்ளது.

இந்நிலையில் ஒரே டோஸாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியின் 3-வது கட்ட சோதனைக்கு இந்தியாவிடம் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இந்தியாவில் 3ஆவது கட்ட பரிசேதனைகள் மேற்கெள்வதுடன் இறக்குமதி உரிமம் பெறுவதற்காகவும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு ஜான்சன் அண்டு ஜான்சன் விண்ணப்பித்துள்ளது. தடுப்பூசிகளுக்கான தேவை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் இதற்கான ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்