கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மாநிலங்களவை குழுக்கள் மாற்றியமைப்பு: நெறிமுறைக்குழு தலைவராக பிரகாஷ் ஜவடேகர் நியமனம்

மாநிலங்களவை குழுக்களை, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்று மாற்றியமைத்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மாநிலங்களவை குழுக்களை, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மாற்றியமைத்துள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

* மாநிலங்களவை நெறிமுறைகள் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக முன்னாள் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

உறுப்பினர்களாக டெரக் ஓ பிரையன் (திரிணாமுல் காங்கிரஸ்), ஜெய்ராம் ரமேஷ் (காங்கிரஸ்), சஸ்மித் பத்ரா (பிஜூஜனதாதளம்), விஜய்சாய் ரெட்டி (ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்) உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* மாநிலங்களவை பா.ஜ.க. மூத்த தலைவர் சி.எம். ரமேஷ், வீட்டு வசதிக்குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* மனுக்கள் குழு தலைவராக பிஜூ ஜனதாதளம் கட்சி எம்.பி. சுஜீத் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

* அ.தி.மு.க. எம்.பி. எம்.தம்பித்துரை, உறுதிமொழிகள் குழு தலைவராகி உள்ளார்.

* மாநிலங்களவையில் தாக்கலாகிற ஆவணங்கள் குழுவுக்கு பா.ஜ.க.வின் காமக்ய பிரசாத் டாசா தலைவர்.

* பா.ஜ.க. தலைமைக்கொறடா லட்சுமிகாந்த் பாஜ்பாய், துணைச்சட்ட குழு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்