தேசிய செய்திகள்

ஜே.இ.இ. முதன்மை தேர்வு ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்குகிறது - தேசிய தேர்வு முகமை

ஜே.இ.இ. தேர்வு தொடர்பான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை(என்.டி.ஏ.) வெளியிட்டு இருக்கிறது.

தினத்தந்தி

சென்னை,

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. ஏற்கனவே 4 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், 2022-23-ம் ஆண்டில் இருந்து 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஜே.இ.இ. தேர்வு தொடர்பான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை(என்.டி.ஏ.) வெளியிட்டு இருக்கிறது. இதில் ஜே.இ.இ. முதற்கட்ட தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 16, 17, 18, 19, 20, 21 ஆகிய நாட்களில் நடத்துகிறது. 2-ம் கட்ட தேர்வு மே மாதம் 24. 25, 26, 27, 28, 29-ந்தேதிகளில் நடக்கிறது. முதற்கட்ட தேர்வை எழுத விருப்பமுள்ளவர்கள் வருகிற 31-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்