தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட்: பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு

பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

தினத்தந்தி

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதியில் பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

ராஞ்சியில் இருந்து கிரிதி நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பராக்கர் ஆற்றின் பாலத்தில் செல்லும்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ஆற்றில் கவிழ்ந்ததால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி பயணிகள் உயிருக்கு போராடினர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக வெவ்வெறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெறுபவர்களை ஜார்க்கண்ட் மந்திரி பேபி தேவி நேரில் சென்று நலம் விசாரித்து இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதாக கூறினார்.

மேலும் ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தனது டுவிட்டர் பக்கத்தில்,'விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். சிகிச்சையில் இருப்பவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்' என பதிவிட்டுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்