தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் விலை அதிரடியாக குறைப்பு

ஜார்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ராஞ்சி,

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்ததையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை முறையே ரூ.5 மற்றும் ரூ.10 குறைத்து மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதைப்பின்பற்றி,25 மாநிலங்களில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி சற்று குறைக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் இன்றி ஒரே விலையில் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், புத்தாண்டு பரிசு அளிக்கும் வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்படுவதாக அம்மாநில முதல் மந்திரி ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.

ஜார்க்கண்டில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 98.48 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அரசு அறிவிப்பின் படி ரூ.25 குறைக்கப்பட்டால் ஒரு லிட்டர் ரூ.73.48 ஆக இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விற்பனை செய்யப்படும். வரும் 2022- ஜனவரி 26 ஆம் தேதி முதல் இந்த விலைக்குறைப்பு அமலுக்கு வரும் எனவும் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை