கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

உலக வங்கி மூலம் குறைந்த வருவாய் நாடுகளுக்கு உதவ வேண்டும் - ஜோ பைடன் வலியுறுத்தல்

உலக வங்கி மூலம் குறைந்த வருவாய் நாடுகளுக்கு உதவ வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

'ஜி-20' மாநாட்டுக்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லி வந்துள்ளார். இந்த நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'குறைந்த, நடுத்தர வருவாய் நாடுகளுக்கு உதவுவதற்காக ஜி-20 நாடுகளின் ஆதரவுக்கு அதிபர் ஜோ பைடன் வலியுறுத்துகிறார். உலக வங்கியின் நிதிநிலைமையை ஒருமுறை உயர்த்தும் வகையில், ஜி-20 நாடுகள் அதற்கு பங்களிப்பு செய்ய வேண்டும். அது, உலக வங்கியின் வருடாந்திர சலுகை அல்லாத கடன் தொகை அளவின் 3 மடங்குக்கு இணையாக இருக்க வேண்டும்.

இந்த முயற்சி, உலக வங்கியை வலுவான அமைப்பாக மாற்றும். மேலும் ஏழை நாடுகளின் அவசர தேவைகளுக்கு உதவ முடியும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து