தேசிய செய்திகள்

தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விசாரணை குழுவில் நீதிபதி இந்து மல்கோத்ரா

தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விசாரணை குழுவில் நீதிபதி இந்து மல்கோத்ரா நியமனம் செய்யப்பட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, அவரிடம் உதவியாளராக பணியாற்றிய 35 வயது பெண் ஊழியர் கூறிய பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இந்த புகார் பற்றி விசாரிக்க நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய மூவர் குழுவை சுப்ரீம் கோர்ட்டு அமைத்து உத்தரவிட்டது.

இந்த குழுவின் முன்பு ஆஜராகுமாறு, புகார் கூறிய பெண் ஊழியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசுக்கு பதில் அளிக்கும் வகையில் அந்த பெண் ஊழியர் விசாரணை குழுவிற்கு எழுதிய கடிதத்தில், நீதிபதி என்.வி.ரமணா, குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர். அவருடைய வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்கின்றவர்.

இருவருக்கும் இடையே உள்ள நெருக்கத்தின் அடிப்படையில் தன்னுடைய புகாரை இந்த குழு நியாயமாக விசாரிக்க வாய்ப்பு இல்லை என்றார். இதனையடுத்து இதைத்தொடர்ந்து, விசாரணை குழுவில் இருந்து தான் விலகிக் கொள்வதாக நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார். எனவே, அவருக்கு பதிலாக வேறொரு நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இப்போது தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விசாரணை குழுவில் நீதிபதி இந்து மல்கோத்ரா நியமனம் செய்யப்பட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...