தேசிய செய்திகள்

குஜராத் ஐகோர்ட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாக சோனியா கோகானி பதவியேற்பு

குஜராத் ஐகோர்ட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாக சோனியா கோகானி பதவியேற்றுக்கொண்டார்.

தினத்தந்தி

காந்திநகர்,

குஜராத் ஐகோர்ட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாக சோனியா கோகானி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்வ்ரத் காந்தி நகரில் உள்ள ராஜ்பவனில் முறைப்படி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதல்-மந்திரி பூபேந்திர படேல், குஜராத் சட்ட துறை மந்திரி ருஷிகேஷ் படேல், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பேலா திரிவேதி ஆகியோர் பங்கேற்றனர். சோனியா கோகானி வரும் 25-ம் தேதி பணி ஓய்வு பெற உள்ளதால் 9 நாட்கள் மட்டுமே அவர் இப்பொறுப்பில் இருப்பார் என கூறப்படுகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்