தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு வர உள்ள மேலும் 14 - 16 சிவிங்கிப்புலிகள் - மத்திய மந்திரி தகவல்

தென் ஆப்ரிக்காவில் இருந்து 14 - 16 சிவிங்கிப்புலிகள், வரும் மாதங்களில் இந்தியாவுக்கு எடுத்து வரப்பட உள்ளதாக, மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பாக, கடந்த ஒன்பது ஆண்டுகளில் மத்திய அரசு செய்துவரும் பல்வேறு முயற்சிகள் குறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா செய்தியாளர்களிடம்  கூறியதாவது: வனவிலங்கு பாதுகாப்பில் என் தந்தை முக்கியப் பங்காற்றியுள்ளார்.

சிறுவயதில் இருந்தே வனவிலங்கு ஆர்வலராக இருக்கும் எனக்கு இந்த துறை குறித்த ஆர்வமும், அக்கறையும் எப்போதும் உண்டு.வனவிலங்குகளை பாதுகாப்பதும், அவை பல்கி பெருகுவதை உறுதி செய்வதும் நம் பாரம்பரியத்தின் அங்கமாகவே இருந்து வருகிறது. அவற்றை பொக்கிஷமாக பாதுகாத்து, பராமரித்து வளர்த்து, அடுத்த தலைமுறையினருக்கு அளிக்க வேண்டியது நம் கடமை.

மத்திய அரசின் சிவிங்கிப்புலி பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தென்னாப்ரிக்காவின் நமீபியாவில் இருந்து எட்டு சிவிங்கிப்புலிகள் கடந்த ஆண்டு செப்., மாதம் இந்தியாவுக்கு எடுத்து வரப்பட்டன. அவற்றை, மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவுக்கு பிரதமர் மோடி அளித்தார். வரும் மாதங்களில், மேலும் 14 - 16 சிவிங்கிப்புலிகள் தென்னாப்ரிக்காவில் இருந்து எடுத்து வரப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்