தேசிய செய்திகள்

பெல்தங்கடியில் கபடி வீரர் தூக்குப்போட்டு தற்கொலை

பெல்தங்கடியில் கபடி வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் என்ன?- என்பது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மங்களூரு-

தட்சிணகன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா புதுவெட்டு பகுதியை சேர்ந்தவர் சுவராஜ் (வயது 24). இவர் உஜிரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். மேலும் கபடி வீரரான இவர் மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறந்த வீரராக வலம் வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை சுவராஜ் தனது வீட்டில் உள்ள குளியல் அறையில் குளிக்க சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் அவர் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் தர்மஸ்தலா போலீசார் விரைந்து வந்து, தற்கொலை செய்த சுவராஜ் உடலை மீட்டனர்.

பின்னர் அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்