தேசிய செய்திகள்

ஹிஜாப் வழக்கு: விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது கர்நாடக ஐகோர்ட்

ஹிஜாப் விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது கர்நாடக ஐகோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) விசாரணை நடைபெற்றது.

தினத்தந்தி

பெங்களூரு,

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக முஸ்லிம் மாணவிகள் 18 பேர் சார்பில் மனுக்கள் கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் அந்த மாணவிகள், ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வர தங்களை அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிடக்கோரி கோரியுள்ளனர். இந்த மனுக்கள் கர்நாடக ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய அந்த அமர்வு, கடந்த 10-ந் தேதி இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அதில் அனைத்து மாணவர்களும் மத அடையாள ஆடைகளை அணிந்து வர தடை விதித்து உத்தரவிட்டனர். கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளை உடனே திறக்க வேண்டும் என்றும், இறுதி தீர்ப்பு வரும் வரை அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் இந்த மனுக்கள் மீது தொடர்ந்து விசாரணை நடத்தி விரைவாக தீர்ப்பு வழங்குவதாக தலைமை நீதிபதி உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்த இந்த மனுக்கள் மீதான விசாரணை 14-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஹிஜாப் விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது கர்நாடக ஐகோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) விசாரணை நடைபெற்றது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் அஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், அரசின் உத்தரவு சட்டப்பூர்வமானது இல்லை என வாதிட்டார். தொடர்ந்து பல்வேறு வாதங்களை தேவதத் காமத் முன்வைத்த நிலையில், வழக்கின் விசாரணையை நாளை பிற்பகல் 2.30 மணிக்கு ஐகோர்ட் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து