தேசிய செய்திகள்

கர்நாடக சட்டப்பேரவை மீண்டும் கூடியது; எடியூரப்பா பேசி வருகிறார்

கர்நாடக சட்டப்பேரவை உணவு இடைவேளைக்கு பின்னர் மீண்டும் கூடியதும் முதல் அமைச்சர் எடியூரப்பா அவையில் பேசி வருகிறார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், அதிக தொதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து எடியூரப்பா முதல்வராக பதவியேற்று கொண்டார். அவர் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கவர்னர் உத்தரவிட்டார்.

ஆனால் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மே 19ம் தேதி மாலை 4 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.

இந்த நிலையில், உணவு இடைவேளைக்காக ஒத்தி வைக்கப்பட்ட கர்நாடக சட்டப்பேரவை மதியம் 3.30 மணியளவில் மீண்டும் கூடியது. இதில் மீதமுள்ள அவை உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டனர். கர்நாடக முன்னாள் முதல் அமைச்சர் சித்தராமையா மகன் யதீந்திரா எம்.எல்.ஏ.வாக பதவியேற்று கொண்டார். அதன்பின் முதல் அமைச்சர் எடியூரப்பா அவையில் பேசி வருகிறார்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்